Thursday, April 28, 2011

ஊருக்கு மட்டும் தான் உபதேசம் எனக்கல்ல

ஊருக்கு மட்டும் தான்  உபதேசம் எனக்கல்ல 
இது இஸ்லாத்தில் எந்த அளவு பாரதூரமானது பாருங்கள் ! 

நபி صلاله عليهوسلم அவர்களின் அமுத வாக்கு இவ்வாறு கூறுகிறது 

உங்களிடம் இல்லாத நற்பண்புகளை பிறரிட்கு ஏவாதீர்கள்.

புனிதமிகு அல் குரான் இவ்வாறு கூறுகிறது : 

سورة البقرة
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚأَفَلَا تَعْقِلُونَ ﴿٤٤﴾
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)

Will you enjoin good deeds on the others and forget your own selves? You also read the Scriptures, why do you then not understand?

Wednesday, April 27, 2011

இஸ்லாமிய உணர்வு


இஸ்லாமிய உணர்வுகளற்ற 
காரில் செல்கின்ற....
கம்பனி உரிமையாளரை விட
இஸ்லாமிய உணர்வுள்ள 
சைக்கிளில் செல்கின்ற..
வடை வியாபாரி அல்லாஹ்விடத்தில்
மேலானவர்...

Face book

வீட்டிலே facebook உடன் 
உணர்வுகளெல்லாம் பகிர்ந்தால் 
ரோட்டிலே face cover உடன் 
உணர்வுகளை அடக்கித்தான் 
என்ன பயன்...!!!! 

Monday, April 11, 2011

France இல் ஹிஜாப் இற்கு எதிரான சட்டம் அமுலுக்கு வந்து, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 2 பெண்கள் 2011.04.11.அன்று கைது செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்று சர்ச்சைக்கு உரிய விடயமாக இருந்த போது என் மனதில் அன்று ஏற்பட்ட ஆதங்கம். 

அசத்தியம் அழியும். 

அறநெறி செல்வோரெல்லாம் 
அழகு முழு ஆடை அணிவதை 
அயோக்கிய பிரஞ்சுத்தலைவன் அறியவில்லையா.?
அராபிய முறையில் முக்காடனியும்
அப்பாவி முஸ்லிம் பெண்களை - ஏன் 
அனுமதி மறுக்கிறான் அவன்..???
அஞ்ஞானம் விரும்புவதால்..
மெய்ஞானம் மறுக்கிறான..??
அல்லாஹ்வின் கட்டளை மறுத்தோரின் முடிவை 
அதிவிரைவில் உணர்வான் இன்ஷா அல்லாஹ்!!

Wednesday, September 29, 2010

Religions

Every People can understand Islam clearly here.

For Sinhala Speaking people, You can follow the following websites:
www.yayuthumaga.com
www.sihalamuslims.org

For Tamil Speaking people, You can follow the following websites:
www.islamkalvi.com
www.onlinepj.com

For English Speaking people, You can follow the following websites:
www.islamreligion.com

பொறுமையின் பெருமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வபரகாதுஹு  


அன்பர்களே.. இந்த கட்டுரையின் நோக்கம் உண்மையிலேயே நாவின் கட்டுப்பாட்டை எடுத்துக்கூறவே ஆகும். குறிப்பாக கூட்டங்கள் , கடைத்தெருக்கள் மட்டுமன்றி வீட்டிலும் கூட நமது நாவை விரும்பிய வாறெல்லாம் பயன்படுத்துவதால் இறுதியில் பல்வேறு மனச்ச்சஞ்சலங்களுக்கும், மனக்கஷ்டங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது .  வாசகர்களே நீங்கள் எவ்வாறோ எனக்குத்தெரியாது ஆனால் ஒன்று சொல்கிறேன் நாம் எப்போதும் நியாயத்தின் பக்கம் தான் இருக்க வேண்டும். ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதுமே இறைவன் தன்னை  பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற நினைவோடுதான் வாழ்வான். எனவே எப்போதும் இறைவனுக்கு பயந்தவனாக நியாயத்தின் பக்கமே அவனது கருத்துக்கள் அமைந்திருக்கும். சமுகத்தில் அதிகமான மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள், இப்போது நிச்சயமாக பெரும்பான்மையானவர்களிடம் இருந்து பகைமையே எம்மை வந்தடையும் இப்போது தான் பொறுமையின் அவசியம்  மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. 

சபை ஒன்றில் அல்லது வீட்டில் என்றாலும் எமக்கு ஒரு சில கருத்துக்கள் தெரிவிக்க வேண்டி நேரிட்டால் இங்குதான் நாம் நம் வார்த்தைகளை அளந்து வெளியிட வேண்டி இருக்கிறன்றது. குறித்த சபைகளில் நமது பார்வையில் மாற்றமான கருத்துக்கள் வெளிவரும் போது உணர்வலைகள் பொங்கிக்கொண்டு வருவது இயல்பு தான் இப்போது உணர்வு வேகத்தை அடக்கிக் கொண்டு, சகித்துக்கொண்டு இருப்பது தான் உண்மையிலேயே திறமையாகும். 

வாய் தவறிவிட்டால் வருத்தம் தான். கொஞ்சம் விலகிச்சென்றால் சிறிது நேரத்தில் நினைத்து சந்தோசமடைய இது வழி வகுக்கும். 

அன்றாட நடவடிக்கைகளின் போது பொறுமை கடைபிடிக்க அல்லாஹு த ஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன். 

உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். 

வஸ்ஸலாம். 

Saturday, June 19, 2010

Which is the real path?



அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வபரகாத்துஹு, 


அன்புள்ள மானிட நெஞ்சங்களே ! 

நீங்கள் தான் உண்மையான அதிஸ்டசாலிகள் 

தயவு செய்து உங்கள் பார்வையை சற்று இப்பக்கத்திற்கு செலவிடுங்கள் 

நீங்கள் வெற்றியாளர் ஆகப்போஹிரீர்கள், யோசிக்கிறீர்களா!.... ( என்ன அந்த வெற்றி என்று ...?.)

நீங்கள் ஈருலக வெற்றியாளர் ஆகப்போகிறீர்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும் என 

யோசிக்கிறீர்களா? ஆம் பின்வரும் விடயங்களை சற்று நன்றாக சிந்தித்து 

முடிவெடுத்துக்கொள்ளுங்கள் : 

  • நான்  ஏன் படைக்கப்பட்டிருக்கிறேன் , பிறந்து, வளர்ந்து, விரும்பிய விதத்தில்  வாழ்ந்து, மடிந்தால் பிறந்ததற்கான அர்த்தம் சரிதானா? அல்லது ஏதும் முக்கிய எதிர்பார்ப்பை வைத்துத்தான் இறைவன் எம்மை படைத்து இருக்கிறானா ? 
  • ஏன் பல இனங்கள், குலங்கள், மதங்கள், வர்க்க வேறுபாடுகள்?.

  • எம்மதத்தை சார்ந்திருந்தாலும் இறைவன் எம்மை பொருந்திக்கொள்வானா ? 

  • பிறப்பதும் இறப்பதும் ஓர் இயற்கையான செயலாக இருக்கலாம் என நினைக்கிறீர்களா? 

  • மரணத்தின் பின் உலகில் செய்த விடயங்கள் விசாரணை செய்யப்பட்டு அதக்குரிய பெறுபேறு வழங்கப்படும் என நினைக்கிறீர்களா ? 
  • உலக வாழ்க்கையின் பூரணமான வாழ்க்கை திட்டத்தை ஓர் மதம் குறிப்பிட்டு இருக்கிறது அதைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? 

  • ஓர் உயர் இஸ்தலத்தை அடைய முயற்சியும் சிரமமும் அடைய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? 
  • உலகம் இறைவன் மனிதனுக்குக்கொடுத்த ஓர் சோதனைக்களம் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளத? 

  • பாவங்கள் இலகுவாகவும் நன்மைகள் செய்வது கொஞ்சம் கடினமாகவும் இருப்பதை உணர முடிகிறதா? 

  • நல்ல முறையில் வாழ்ந்த மனிதர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தையும், பாவம் செய்கின்ற  மனிதர்களுக்கு நரகத்தையும் வழங்குவன் என்று இறைவனே கூறுகிறானே இது சரி தானே! ? 

  • நரக வேதனயை எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறானே இதை உங்கள் மனம் ஏற்கிறதா , ஆம் உலகம் அண்டசராசரம் அனைத்தையும் படைத்த அந்த இறைவனின் வேதனயை எம்மால் தாங்கவே முடியாது தான் என்று எமது உடலில் சிறு கீறல் வந்த போது அந்த வேதனை கூட எம்மால் தாங்க முடியாதே அதனால் இதை ஏற்றுக்கொள்கின்றோம். என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? 




 ஆம் அன்பர்களே ! ஏன் நாம் நமது வாழ்க்கை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியாது ?

இது நமது பலகீனம் அல்லவா?  ஆம் இதற்கு என்ன பரிகாரம் என யோசிக்கிறீர்களா..? 

பரிகாரம் உண்டு நண்பர்களே ! 

நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தை கற்று அறிந்த நல் அறிஞ்சர்களிடம் தெளிவாக கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள்.  

நிச்சயம் நீங்கள் வெற்றியாளர்கள் ஆகலாம். இது நிச்சயம் சத்தியம். 

இந்த வெப் பக்கத்தோடு தொடர்ந்து இருங்கள். இன்னும் பல சிறந்த சிந்தனைக்கு விருந்துகளை இன்ஷா அலலாஹ் எதிர் வரும் காலங்களில் தர இருக்கிறேன்.

வஸ்ஸலாமு அலைக்கும்.